Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 25 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றில் ஆறாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக அப்பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரிடம் பெற்றோர்கள் இன்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
கல்குடாக் கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலவெட்டுவான் அ.த.க. பாடலையில் ஆரம்பக் கல்வி கற்றுவந்த ஒன்பது மாணவர்கள், அந்தப் பாடசாலையில் இரண்டாம் நிலை வகுப்புகள் இல்லாததைத் தொடர்ந்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இதில் இம்மாணவர்கள் குறைந்த புள்ளிகள் பெற்றுக்கொண்டதைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்துக்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்களான நிலையில், இந்த மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதவாறு வீடுகளில் முடங்கிக் கிடப்பதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
இதன்போது தெரிவித்த பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், 'இந்த விவகாரம் தொடர்பில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் குறித்த பாடசாலை அதிபருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago