Niroshini / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பினை இலக்காகக் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் விசேட செயலமர்வு மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைவாக முன்பள்ளி ஆசிரியர்களை கவின் கலை செயற்பாடுகளில் ஊக்குவிக்கும் முகமாக இந்தப் பயிற்சிச் செயலமர்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில்,மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ. நவேஸ்வரன், சிறுவர் பெண்கள் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிளான் ஸ்ரீ லங்கா நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


9 hours ago
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Dec 2025
15 Dec 2025