ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கணேச வித்தியாலய வீதியை அண்டிய பகுதியின் கொட்டில் ஒன்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை மீட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (21) காலை மீட்கப்பட்ட இச்சடலம், அப்பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சண்முகரெத்தினம் பிரதீபாவினுடையது என, பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளனர்.
அப்பகுதியிலுள்ள கடையொன்றில் இவர் தொழில் புரிந்து வந்துள்ளார்.
வழமை போன்று கடைக்குச் செல்பவர், இன்று கடைக்குத் தயாராகவில்லை என பெற்றோர் தேடியபோது, வீட்டோடு சேர்ந்ததாக அமைக்கப்பட்டிருந்த கொட்டிலுக்குள், சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பான தகவல் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக, செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், விரிவான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago