Editorial / 2023 மார்ச் 26 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் பெண்ணொருவர் சடலமாக இன்று (26) ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமொன்று நீரில் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் அடுத்து. சம்பவ இடத்துக்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற் கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(வைப்பக படம்)
25 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
2 hours ago