2025 மே 12, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞர் மரணம்; ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் மாவடிவேம்பு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

 மோட்டார் சைக்கள் விபத்தில் இளைஞனொருவன் பலியாகியுள்ளதுடன் மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
கிரான் விஷ்ணு ஆலய வீதியைச் சேர்ந்த குணராசா குணநிதன் (வயது 21) என்பவரே மரணமடைந்துள்ளார்.  
 
கிரானிலிருந்து  மட்டக்களப்பு நோக்கி தனது நண்பன் சகிதம் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துகொண்டிருந்தபோது,  மோட்டார் சைக்கிள் மாவடிவேம்பு பதியில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன்; மோதி அருகிலிருந்து மின்கம்பத்துடன்; மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X