2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் மரணம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வாகரை, கஜீவத்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த க.விவேகானந்தராசா (வயது 52) என்பவர் விபத்தில் மரணமடைந்துள்ள அதேவேளை,  அவரது மனைவி ரஞ்சிதம் விவேகானந்தராசா (வயது 49) காயமடைந்துள்ளாhர்.  
காயமடைந்தவர் வாகரை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X