Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட 04 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனது வீட்டுக்கு முன்பாக பூ பறித்துக்கொண்டிருந்த பெண் மீது 03 பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியே விபத்துச் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் படுகாயமடைந்துள்ள 04 பேரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த த.தேவிகா (வயது 54), த.மயூரன் (வயது 25), ம.பிரதீபன் (வயது 24), க.அபிஸன் (வயது 17) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
7 hours ago