2025 மே 10, சனிக்கிழமை

விபத்தில் மூவர் காயம்; வான் சாரதி கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 08 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லடி, வேலூர்ப் பகுதியிலிருந்து பாடசாலைக்கு மாணவிகள் இருவரை ஏற்றிச்சென்ற மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதியிலிருந்து பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிவந்த வானும் மோதியதில், அம்மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவிகள் இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் கா.பொ.த.சாதாரணதரத்தில் கற்கும் மாணவிகளான வி.சப்னா (வயது 16), கே.பஜனா (வயது 16) மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற விநாயகமூர்த்தி (வயது 55) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக  வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியை கைதுசெய்துடன், வானைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவி ஒருவரும் அவரது தந்தையும் உறவு முறையான மாணவியுமே மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X