2025 மே 07, புதன்கிழமை

'ஆட்டோவில் 3 பயணிகளே பயணிக்கமுடியும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 20 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் 03 பேருக்கு அதிகமாக ஏற்றிச்செல்லக் கூடாதென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஏ.எல்.அமிலகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு போக்குவரத்து ஒழுங்கு தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'முச்சக்கரவண்டிகளின் பின் ஆசனத்தில் 03 பேருக்கு அதிகமாக ஏற்றிச்செல்லக் கூடாதென்ற போக்குவரத்துச் சட்டம் அமுலிலுள்ளது. ஆனால், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் முச்சக்கரவண்டிகளின் பின் ஆசனத்தில் மூன்று பேருக்கு மேல் ஏற்றிச்செல்வதை அவதானிக்க முடிகின்றது. இது போக்குவரத்துச் சட்டத்தை மீறும் செயலாகும். அவ்வாறு முச்சக்கரவண்டிகளின் பின் ஆசனத்தில் மூன்று பேருக்கு மேல் ஏற்றிச்சென்றால் தண்டம் செலுத்த வேண்டும்.  அல்லது நீதிமன்றத்தில்  முச்சக்கரவண்டிச் சாரதியை கொண்டு ஆஜர்படுத்த வேண்டிவரும். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் போக்குவரத்து ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இதேவேளை, பாதசாரிகள் வீதியை கடக்கும்போது மஞ்சள்; கடவையின் ஊடாக கடக்க வேண்டும். அவ்வாறு மஞ்சள் கடவையினூடாக கடக்காதவர்கள் தண்டம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X