2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

1000 இற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு களப் பயிற்சிகள்

Kogilavani   / 2016 நவம்பர் 14 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்  

கடந்த ஒரு மாத காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், 1,000 இற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகளுக்கு வதிவிட முகாம்களின் மூலம் பல்வேறு வகையான களப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாகக் மேலும் கூறிய அவர்ளூ

'இளைஞர், யுவதிகளை வலுவூட்டும் இளைஞர் ஆளுமை அபிவிருத்தி வேலைத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றியளித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் முகாமின் மூலம், இதுவரை 1,000 மேற்பட்ட  இளைஞர், யுவதிகளுக்கு ஆளுமை விருத்திப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள பிரதேச இளைஞர் சம்மேளன அங்கத்தவர்கள், தலா நூறு பேருக்கு  இளைஞர் ஆளுமை விருத்திப் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். ஆயினும், ஒவ்வொரு இளைஞர் சம்மேளனத்திலிருந்தும் 100இற்கும் மேற்பட்டோர் இப்பயிற்சிகளில் பங்கெடுத்துக் கொண்டனர்.

நவம்பர் மாத இறுதிக்குள் சுமார் 500 பேருக்கு இளைஞர், வதிவிட முகாமின் மூலம் இளைஞர் அபிவிருத்தி ஆளுமைப் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

'நாடளாவிய ரீதியில் 33 ஆயிரத்து 400 இற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள்  இளைஞர் வதிவிட முகாம் ஆளுமை விருத்திப் பயிற்சியை நிறைவு செய்துள்ளார்கள்' என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X