2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் இரட்டைப் படுகொலை 6 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பான 6  சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.   

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்    மட்டக்களப்பு மேலதிக நீதிபதி  எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில்  இன்று (19) இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவர்களுக்கான விளக்கமறியலை நீடித்துள்ளார்.

ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் சடலங்கள்  கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .