Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்; தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும், அவரது பணியை சிறைப்படுத்தமுடியாதென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவர் திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நாவற்கேணியில் நடைபெற்றது. இதன்போது, 20 குடும்பப் பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு வாழ்வாதாரத்துக்;கான நிதி வழங்கப்பட்டது.
இதற்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினரினால் இரண்டு இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாக மகளிர் அணித்தலைவர் திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய திருமதி செல்வி மனோகர், 'மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலையை போக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. கடந்த காலத்தில் எமது கட்சி தலைவர் சந்திரகாந்தனால் வாழ்வாதார திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன.பல பெண்கள் அதன் மூலம் சிறந்த பலன்களைப்பெற்று தமது குடும்ப நிலைமையை மேம்படுத்தியுள்ளனர்.
சந்திரகாந்தன் இன்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அவரது பணியை சிறையில் அடைக்கமுடியாது.அதனை நாங்கள் முன்னெடுப்போம்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது தமிழ் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்சி. அதன் அர்ப்பணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
மிக விரையில் எமது தலைவர் நிரபராதியாக வெளிவருவார்.மேலும் எங்கள் செயற்பாடுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படும். கிழக்கு மாகாண தமிழர்களின் எதிர்காலம் எமது குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பில் எமது கட்சி சிந்தித்து செயற்பட்டுவருகின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago