2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'பொலிஸார் பக்கச்சார்பின்றி கடமையாற்ற வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 25 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பக்கச்சார்பின்றி கடமையாற்ற வேண்டும் என  புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளதை கௌரவிக்கும் நிகழ்வு, இராஜாங்க அமைச்சரின்; காத்தான்குடிப் பிராந்திய அலுவலகத்தில்  திங்கட்கிழமை (23) இரவு நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, ' பொலிஸார் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுகின்ற அதேவேளை, மனித நேயத்துடனும் பணியாற்ற வேண்டும்.

சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. அதேபோன்று, போதைவஸ்துப் பாவனையை ஒழிப்பது, போதைவஸ்தை ஒழிப்பதில் பொலிஸார் ஈடுபட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X