2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் சுவரொட்டிகள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'அபிவிருத்தி தடைப்படும், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களின் போராட்டம் ஆரம்பமாகின்றது' என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் கிழக்கு மாகாணத்தின்; பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.

அரச சேவை தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களின் சங்கத்தால் ஒட்டப்பட்டுள்ள அச்சுவரொட்டிகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கள கொடுப்பனவு மற்றும் பணிக் கொடுப்பனவை தொழில்நுட்ப உத்தியோகஸ்;தர்களுக்கு வழங்கவும், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களின் பணி உரிமையை உறுதிப்படுத்தவும். செப்டெம்பர் 6ஆம், 7ஆம், 8ஆம் திகதிகளில் இந்தப் போராட்டம் நடைபெறும்' என எழுதப்பட்டுள்ளது.

சகல அரசாங்க அலுவலகங்களுக்கு முன்பாகவும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இச்சுவெராட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X