Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 05 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 350 மாணவர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை கற்றல் உபகரணங்களுடன் பாதணிகளும்; வழங்கப்பட்டன.
'கல்விக்கு கைகொடுப்போம்' என்ற செயற்றிட்டத்தின் கீழ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 300 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும் புத்தகப்பைகளும் வழங்கப்பட்டதாக அப்பிரதேச செயலளார் யூ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.
பிரதேச செயலகத்தில் பல்வேறு படித்தரங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் நன்கொடையுடனும் பிரதேசத்தில் உள்ள பரோபகாரிகளின் அன்பளிப்புகளுடனும் வறிய மாணவர்களுக்கு உதவும் 'கல்விக்குக் கைகொடுப்போம் திட்டம்' ஆரம்பிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஏறாவூர் நகரிலுள்ள 50 மாணவர்களுக்கு தலா 1,800 ரூபாய் பெறுமதியில் பாதணிகளும் புத்தகப் பைகளும் இன ஒற்றுமைக்கும் சமாதானத்துக்குமான அமைப்பினால் வழங்கப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் ஐ.எம்.சஜீர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago