Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்
2016 ஆம் ஆண்டில் 365 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இன்று(21) கிழக்கு மாகாண சபையில் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தினை முன்வைத்து உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு எமது கிழக்கு மாகாண சபை நிதியீட்டத்துடனான நிகழ்ச்சி திட்டங்களுக்கு மேலதிகமாக மத்திய அரச நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் எமது மாகாண நோக்குடன் ஒன்றிணைந்தமையாக தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை, மாகாண சபை நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் வெளிநாட்டு நிதியுதவியுடனான விசேட கருத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.
அண்மைக்காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வெளிநாட்டு நிதியுதவியுடனான விசேட திட்டங்களில் அநேகமானவை இவ்வாண்டில் முடிவுறுத்தப்பட்டுள்ளமையால் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது அடுத்த வருடத்துக்கான விசேட கருத்திட்டங்கள் குறைவாகவே காணப்படுகின்றன .
புதிய கருத்திட்டங்கள் மற்றும் வருமானத்தை உழைக்க கூடிய நிறுவனங்களை உருவாக்கி செயற்படுத்துதல் என்பவற்றுக்கான நிதியீட்டங்களை தேடிப்பெறவேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது. .
இரண்டாவது சுகாதாரத்துறை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2016ஆம் ஆண்டில் 365 மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதையும் தற்போது உலக வங்கி , அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கும் பாடசாலைக் கல்வி அபிவிருத்தித் திட்டத்துக்கென 495 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிதியுதவியுடன் அடிப்படை சமூகசேவை உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்துக்கென 95 மில்லியன் ரூபாவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர்களுக்கான அவசர நிதியத்தின் கீழ் 15 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago