Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 11 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வறுமையைக் காரணம் காட்டி கல்வியை இடைநடுவில் விட்டு விடக்கூடாதென காத்தான்குடி கப்பல் ஆலீம் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.
காத்தான்குடியில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இன்று பல மாணவர்கள் தமது குடும்பத்தின் வறுமையை காரணம் காட்டி கல்வியை இடைநடுவில் விட்டு விடுகின்றனர். அவ்வாறு கல்வியை இடை நடுவில் விட்டு விடக் கூடாது.
கல்வியே எமது மிகப் பெரிய சொத்தாகும். இன்று தமது பிள்ளைகளை கல்வியின் மூலம் உயர் நிலைக்கு கொண்டுவருவதற்காக பெற்றோர்கள் மிகவும் சிரமத்துடன் உழைக்கின்றார்கள். இந்த நிலையில் மாணவர்களும் தமது குடும்ப நிலைமையை அறிந்து கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago