2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

4 வைத்தியசாலைகளில் கமெரா பொருத்த ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,பொன் ஆனந்தம், எம்.முபாரக்,வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  04 வைத்தியசாலைகளுக்கு சி.சி.ரி.வி;. கமெராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில்;, 5.22 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்,  இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில் செங்கலடி மாவட்ட வைத்தியசாலை, வாழைச்;சேனை ஆதார வைத்தியசாலை, மீராவோடை மாவட்ட வைத்தியசாலை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றிலேயே கமெராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தின்போது, வைத்தியசாலைகளில் இடம்பெற்ற பல சம்பவங்களினால்; எழுந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து, மக்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வைத்தியசாலைகளில் கமெராக்களை பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் முறைப்பாடுகளுடன் கூடிய பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்கு  கமெராக்கள் உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X