2025 மே 02, வெள்ளிக்கிழமை

பனிச்சையடிக் கடலில் 03 இளைஞர்களை தேடும் பணி

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 27 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.ரவீந்திரன்,ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை  குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன  இளைஞர்கள் மூவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

நண்பர்கள் 07  பேர் ஒன்றாக கடலில் குளித்துக்கொண்டிருந்த நிலையில், 04 பேர் திரும்பி கரைசேர்ந்ததாகவும் இருப்பினும், தங்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் கடல் அலையால் அள்ளுண்டு செல்லப்பட்டதாக தப்பி வந்தவர்கள் கூறியதாகவும் பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பு பேச்சியம்மன் கோயில் வீதி, சின்ன ஊறணியைச் சேர்ந்த ரகுநாதன் டானியல் (வயது 23),  பனிச்சையடியைச் சேர்ந்த ஜேரம் அனிஸ்டஸ் (வயது 20),  மட்டக்களப்பு புதிய எல்லை வீதி 2ஆம் குறுக்கைச் சேர்ந்த சேகர் பிரதீப் (வயது 19) ஆகியோரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .