Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சக்திவேல்)
எதிர்வரும் 19ஆம் திகதி மத அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான தி.மு.விஜயரட்ண கிழக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றினை மேற்கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரித்தார்.
பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இறுவட்டு வெளியீட்டு வழாவில் நேற்று கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பாக மேலும் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்; கடந்த யுத்தகாலத்திலும் சுனாமியிலும் அழிவுற்ற இந்து ஆலையங்களை பிரதமரிடம் காண்பிக்கவுள்ளோம்.
அதன்மூலம் அழிவுற்றிருக்கும் ஆலயங்களின் வளர்ச்சிக்காக நிதியுதவிகளைக் கோரவுள்ளோம். அதனடிப்படையில் எதிர்வரும் 14ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கும் விஜயம் செய்து நிலமையினை பிரதமர் நேரில் அவதானிக்கவுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
44 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
53 minute ago
2 hours ago