2025 மே 05, திங்கட்கிழமை

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சுயதொழில் உதவிகள்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உதவிகள் நேற்று சனிக்கிழமை வழங்கப்பட்டன.

தையல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரங்கள், ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்புக்கான வாழ்வாதார  முதலீடுகள் ஆகியன வழங்கப்பட்டன.

தெரிவு செய்யப்பட்ட 14 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உதவிகளை பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20,000 ரூபா பெறுமதியான இந்த உதவித் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இந்த உதவிகள் வழங்கப்பட்டன. 

6 குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களும் 3 குடும்பங்களுக்கு மா அரைக்கும் இயந்திரங்களும் 4 குடும்பங்களுக்கு ஆடு வளர்ப்புக்கான உதவியும்  ஒருவருக்கு கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டன.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் அந்தப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X