2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வெருகல் பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வெருகல் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வெருகல் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார்.

தனியார் பஸ் வண்டியும்  மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதிலேயே  இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த எம்.பஜீபன் (வயது 04),  எஸ்.ஞானரூபன் (வயது 20) ஆகியோரே  இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X