2025 மே 05, திங்கட்கிழமை

இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சார்ஜனை வெலிக்கடைக்கு மாற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான பொலிஸ் சார்ஜனை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜனை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் பதில் நீதவான் பணித்துள்ளதையடுத்தே அவரை கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சார்ஜனை  எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஐ.நூர்தீன் சந்தேக நபரை அன்றையதினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் பணித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கடந்த சனிக்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து மேற்படி பொலிஸ் சார்ஜன் கைதுசெய்யப்பட்டார்.

காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றைக் கையாள்வதற்காக நபர் ஒருவரிடமிருந்து இரண்டாயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற வேளையிலே இவர் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X