2025 மே 05, திங்கட்கிழமை

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சுயதொழில் உதவிகள்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வடிவேல் சக்திவேல்


பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பப் பெண்களுக்கு சுயதொழிலுக்கான உதவிகள் நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.

மண்முனை, தென்னெருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட  6 பேருக்கு காசோலைகளும் 3 பேருக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில்,  ஒவ்வொரு பயனாளிக்கும் 10,000 ரூபாவை கொண்ட காசோலை வழங்கப்பட்டது. 

அத்துடன், ஏனைய 3 பயனாளிகளில் ஒவ்வொருவருக்கும்  25,000 ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராச, மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.சதாகர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பாக்கியநாதன், சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X