2025 மே 05, திங்கட்கிழமை

அபிவிருத்தி தொடர்பான உயர் மாநாடு

Super User   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}



-தேவ அச்சுதன், வடிவேல் சக்திவேல்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஐரோப்பிய யூனியனினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை ஒழித்தல், உள்ளூர் பொருளாதார மேம்பாடு, மாவட்டத்தின் மனிதவள ஆளுமை விருத்தி ஆகியவற்றை நோக்காகக் கொண்டு இந்தச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தலைமையில் நடைபெற்ற இந்த உயர் மட்ட மாநாட்டில், ஐரோப்பிய ஜுனியனின் எஸ்.டி.டி.பி திட்டத்தின் இணை திட்ட முகாமையாளர் பாத்திமா நுஸ்ரத் நொசாரே, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாகாண திட்டமிடல் பிரதி பணிப்பாளர் எஸ்.மகேந்திரராஜா, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்  பணிப்பாளர் எஸ்.ஜெயவதனி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

1868.5 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த ஐந்து ஆண்டுத் திட்டத்தினை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், உலக உணவு மற்றும் விவசாய நிறுவனம், யுனிசெப், யுனொப்ஸ், சர்வதேச தொழிலாளர் நிறுவனம், ஐ.எப்.சி எனப்படும் சர்வதேச நிதிவள நிறுவனம் ஆகிய நிறுவனங்கள இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளன.

அதன் படி, வறுமை தணிப்பும், அடிப்படை கட்டுமான உதவிகள் வழங்கலும், நலிவடைந்த குடும்பங்களுக்கான சேவைகளுக்காக 1541.1மில்லியன் ரூபாவும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்திக்கு 233.4 மில்லியன் ரூபாவும் மாவட்ட திட்டமிடல் அபிவிருத்திக்கு 94 மில்லிய ரூபாவும் என நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X