2025 மே 01, வியாழக்கிழமை

விஞ்ஞான தொழிநுட்ப வளநிலைய ஆக்கத்திறன் கண்காட்சியும் விற்பனையும்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மண்முனை மேற்குப் பிரதேச செயலக விஞ்ஞான தொழிநுட்ப வளநிலைய ஆக்கத்திறன் கண்காட்சியும் விற்பனையும் இன்று புதன்கிழமை (04) பிரதேச செயலக மண்டபத்தில் திறந்துவைக்கப்பட்டது.

மண்முனை மேற்குப் பிரதேச விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகஸ்தர் திருமதி சுமித்தா அகிலன் தலைமையில் இடம்பெற்ற இக்கண்காட்சியினை மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், வை.எம்.சீ.ஏ.அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக் கண்காட்சியில் விஞ்ஞான தொழிநுட்ப வளநிலையத்தினால் வழங்கப்பட்ட பயிற்சியினைப் பூர்த்தி செய்தவர்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.

பனை, தென்னை, பன், மட்பாண்டம், கடதாசி மற்றும் கழிவுப் பொருட்களில் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களே இவ்வாறு கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைககப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .