2025 மே 02, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றல்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கொள்கலன் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி பதுளையிலிருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக எடுத்துச்செல்லப்பட்ட ஒரு தொகுதி தேபன்டைன் ரக மரக்குற்றிகளை ஏறாவூர் பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

செங்கலடி - பதுளை வீதியில் கறுத்தப்பாலத்தடியில் வைத்து இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனம்  தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்ட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .