2025 மே 01, வியாழக்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி

Super User   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

கொக்கட்டிச்சோலை, 40ஆம் வட்டை தாந்தாமலை எனும் பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் இன்று திங்கட்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மாவடிமுன்மாரி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய கேதாரபிள்ளை பேகேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலப் பகுதியில் இந்த இடத்தில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .