2025 மே 01, வியாழக்கிழமை

களுவாஞ்சிகுடி விபத்தில் ஒருவர் பலி: நால்வர் படுகாயம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 21 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

பெரியகல்லாறு தெற்கு அமைந்துள்ள ஆலையடிச் சந்தியில்  மோட்டார் சைக்கிள் ஒன்று சீமெந்து குளைக்கும் இயந்திரத்துடன் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த நால்வரும் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .