2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் பன்முக நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர்  பஷீர் சேகுதாவூத்தின் பன்முகப்படுத்தப்பட்ட  நிதியிலிருந்து ஏறாவூர் நகர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமூக நலப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைகள், பள்ளிவாசல்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பனவற்றுக்கு உபகரணங்களும் தளவாடங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் நேற்று சனிக்கிழமை  மாலை இடம்பெற்றது.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்  பஷீர் சேகுதாவூத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. றமீஷா, ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப், நகரசபை உறுப்பினரும் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தின் பிரத்தியேகச் செயலாளருமான முஸ்தபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .