2025 மே 02, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத சுருக்கு வலை கைப்பற்றப்பட்டது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 26 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்த படகொன்றிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி  பயன்படுத்தப்பட்ட 738 மீற்றர் நீளமான சுருக்கு வலையை நேற்று சனிக்கிழமை (25)  காலை கைப்பற்றியதாக கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.

மீன்களை விற்பனை செய்வதற்காக வாழைச்சேனைக்கு வந்த இந்தப் படகிலிருந்த சுருக்குவலையை கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட படகுடன் சுருக்கு வலையை நாளை திட்கட்கிழமை (27) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின்  உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டு 02ஆம் இலக்க கடற்றொழில் நீரியல்வளங்கள் கட்டளைச் சட்டத்தின் 6 - 1 பிரிவின் படி அனுமதிப்பத்திரம் இல்லாமல் சுருக்கு வலை பாவிப்பது குற்றமாகும் எனவும் அவர் கூறினார்.

சுருக்கு வலைகளைப் பயன்படுத்தும்போது சிறிய வகை மீன்கள்; பிடிபடுவதால்,  கடலிலுள்ள பெரிய வகை மீன்களுக்கு  உணவு இல்லாமல் போகும் சந்தர்ப்பம் ஏற்படுவதாகவும் கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .