2025 மே 02, வெள்ளிக்கிழமை

சமையல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 27 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, நொச்சிமுனை மகளிர் செயற்பாட்டு அமைப்புக்கு 80,000 ரூபா பெறுமதியான சமையல் உபகரணங்களை  மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) வழங்கியுள்ளார்.

விநாயகமூர்த்தி முரளிதரனின் நிதியொதுக்கீட்டிலிருந்து சமையல் பாத்திரங்கள், அகப்பைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த சமையல் உபகரணங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தமது அமைப்பை   மேம்படுத்தவுள்ளதாக மட்டக்களப்பு, நொச்சிமுனை மகளிர் செயற்பாட்டு அமைப்பின் தலைவி கோ.எஸ்.உதயமதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்  மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தா பிரபாகரன், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவிந்திரன் உட்பட  பலர்  கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .