2025 மே 02, வெள்ளிக்கிழமை

தவறுக்கு வருந்துகின்றோம்

Kanagaraj   / 2014 ஜனவரி 27 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படமால் காணப்பட்ட 1712 காணிகளின் வெற்று அனுமதிப்பத்திரங்களை மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்து மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் வியாழக்கிழமை கைப்பற்றியதாக மட்டக்களப்பு காணி அதிகாரி குகதா ஈஸ்வரன் தெரிவித்தார் என்று தமிழ்மிரர் இணையத்தளத்தில் 24 ஆம் திகதி வெளியான செய்தி தவறானதாகும்.

இப்பிரதேச செயலகத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்த மாகாண காணி ஆணையாளர், மற்றும் உதவிக் காணி ஆணையாளர் ரவிராஜன் தலைமையிலான அதிகாரிகள் இப்பத்திரங்களை கைப்பற்றியதுடன் எழுதிய நிலையில் இருந்த எல்.சி105 எனும் பெயர் பட்டியலையும் கைப்பற்றி மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்துக்கு எடுத்துச் சென்றிருப்பதாக அவர் மேலம் தெரிவித்தார் என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த செய்தி முற்றிலும் தவறானது என்றும் அவ்வாறான தரவுகளை தான் ஊடகங்களுக்கு வழங்கவில்லை என்றும் அவர் எமது கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்த செய்தியினால் காணி அதிகாரி குகதா ஈஸ்வரனுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

You May Also Like

  Comments - 0

  • Pathmadeva Monday, 27 January 2014 01:27 PM

    பிழையான செய்திக்காக வருத்தம் தெரிவிப்பது நல்லதொரு பண்பு! ஆயினும் இந்தச் செய்தியை மறுபிரசுரம் செய்த மற்றைய இணையத்தளங்கள் தங்களது வருத்தத்தையும் மறுபிரசுரம் செய்வார்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .