2025 மே 02, வெள்ளிக்கிழமை

இரண்டு கட்டுத்துவக்குகளுடன் சிறுவன் கைது

Kogilavani   / 2014 மே 28 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு, அக்குறானை பிரதேசத்தில் இரண்டு கட்டுத்துவக்குகளுடன் சிறுவன் ஒருவன் செவ்வாய்க்கிழமை மாலை(27) கைதுசெய்யப்பட்டுள்ளதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, மினுமினுத்தவெளி அக்குறானையைச் சேர்ந்த 17 வயது சிறுவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்படி இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் அவரிடம் இருந்தது இரண்டு துவக்குகளையும் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி சிறுவனை இன்று புதன்கிழமை (28) வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்துவதற்;கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .