2025 மே 01, வியாழக்கிழமை

வாகன விபத்து: இருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூன் 26 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் வாகனேரி பகுதியில் வியாழக்கிழமை (26)  காலை 8 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தின் போது இருவர் படுகாயமடைந்த நிலையில் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னல பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த லொறியொன்றுடன்  மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கார், நேருக்கு நேர் மோதியதாகலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின்போது குறித்த காரில் பயணித்த இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .