2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தடக்கி விழுந்து இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்; ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை  இரவு  மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது தடக்கி விழுந்த இளைஞர்கள் இருவர்  படுகாயமடைந்த  நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டமாவடியைச் சேர்ந்த யாஸீன் அறபாத் (வயது 19), ஹிஜாஸ் அஹமட் (வயது 18) ஆகியோரே  படுகாயமடைந்தனர்.

மட்டக்களப்பிலிருந்து ஓட்டமாவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இவர்கள் இருவரும், வீதியில் தடக்கி விழுந்ததாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.  எதிரே வந்த டொல்பின் வாகனமொன்றுக்கு இவர்கள் ஒதுங்கி இடமளித்தபோதே இவ்வாறு விழுந்தனர்.

உடனடியாக இவர்கள் இருவரும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X