2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றுள்ள  வாகன விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த எஸ்.ருத்திரநாதன் (வயது 22) என்பவர் மரணமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த சாரதி உட்பட 03 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்து வானொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, கிரான்குளம் சந்தியிலுள்ள வீதியோரத்தில் நின்ற இவர்கள் மீது மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, இந்த விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்து தொடர்பில்  காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X