2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'இயற்கை சக்திவளங்கள் குறைவடைகின்றன''

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'இயற்கைச் சக்தி வளங்கள் தற்போது  குறைவடைந்து வருகின்றன. இதனால், நாம் சமகாலத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படுவதுடன், எதிர்கால சமூகத்தை உலகில் உயிர்வாழ முடியாத ஆபத்தான சூழ்நிலைக்கு ஆளாக்குகின்றோம்.' இவ்வாறு திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரி அதிபர் உரோபினி தேவி ஜோதிநாதன் தெரிவித்தார்.

உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான பயிற்சிநெறி இன்று செவ்வாய்க்கிழமை (30) திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கற்கும் சுமார் 100 மாணவிகளும் சுமார் 25 இற்கும் மேற்பட்ட ஆசிரியைகளும் இந்தப் பயிற்சிநெறியில் பங்குபற்றினர்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தற்போது உலகிலிருக்கும் இயற்கை வளங்களை நாசம் செய்துவிடாது, அவற்றை பாதுகாத்து எதிர்கால சமுதாயத்துக்கு ஒப்படைக்கவேண்டும். இயற்கையாக கிடைக்கக்கூடிய சக்திமூலங்களை நாம் மனித செயற்பாடுகளால் அழித்துவிடாமல் பாதுகாப்பதுடன்,  இருக்கும் வளங்களை மிகச் சிக்கனமாக பாவித்து மீதப்படுத்த வேண்டும்.

தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கை முறையில் நாம் இயற்கை வளங்களை வீணடிப்பதை பற்றி அக்கறையில்லாதவர்களாக இருந்துவருகின்றோம். இது பற்றி சிந்திப்பது அவசியமும் அவசரமுமாகும்.

இல்லையேல் நிலம், நீர், காற்று, ஒளி, மற்றும் கனிமப்பொருட்கள் மூலம் தற்சமயம் கிடைக்கும் சக்தி மூலங்களை இழந்துவிடுவதுடன்,  எதிர்காலத்தில் எம்மையே நாம் அழித்துக்கொள்ள வேண்டிய அபாயகரமான சூழ்நிலை தோன்றும்.' என்றார்.

இலங்கையில் நிலைத்துநிற்கும் அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான பயிற்சிநெறிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசணையோடு சுவிற்ச் ஏசியா  நிறுவனத்தின் ஊடாக பிரக்டிகல் அக்ஸன் நிறுவனமும் ஜனதாக்ஸன்  நிறுவனமும் இணைந்து நடத்தி வருகின்றன.  இந்த பயிற்சிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

உயிர்வாயு தொழில்நுட்பம் பற்றி விழிப்புணர்வூட்டும் தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களின் ஓரங்கமாக இந்தப் பயிற்சி இடம்பெற்றது.

உயிர்வாயு தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்கான திட்டமொன்றை தேசிய மற்றும் மாகாண ரீதியில் அபிவிருத்தி செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் பயிற்சிப்பட்டறைகளும் அமர்வுகளும் நடத்தப்பட்டுவருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X