2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு

George   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள, கிழக்கு மாகாண முஸ்லீம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு, எதிர்வரும் 07ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மறுநாள் 08ஆம் திகதி அதிகாலை 5.15 வரைக்கும்  காத்தான்குடி கடற்கரையோரத்திலுள்ள ஜூமைறா பெலஸில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முழு நிலவில் நடைபெறவுள்ள இந்த ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வில் உரையரங்கம், கவிதையரங்கம், நகைச்சுவை அரங்கம் போன்ற பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் பரிசில்கள மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இந்த ஒன்று கூடலில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் கடிதங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம்.ஜெலீஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X