2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வைத்தியக் கல்வியை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.பாக்கியநாதன்

வைத்தியக்கல்வியை தனியார்மயப்படுத்தும் முகமாக மாலபே கல்வி மையத்தை  இலங்கை வைத்திய சங்கத்துடன் இணைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கமும் இலங்கை வைத்திய சங்கமும் மேற்கொள்வதை கண்டித்து,  கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார பராமரிப்பு விஞ்ஞானபீட மாணவர்கள்  நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்புபீடத்தின் முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமாகி,  மட்டக்களப்பு நகர்வரை சென்;றது.
இதில் விஞ்ஞானபீடத்தின் வைத்திய மாணவர்கள் பலர் கலந்துகொண்டதுடன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஏனைய பீட மாணவர்களும் ஒத்துழைப்பு வழங்கி அவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த விஞ்ஞானபீட மாணவர்கள், 'கல்வி, எமது நாட்டில் மாத்திரமே இலவசமாக கிடைக்கப்படுகின்றது. அதை தற்போது வியாபாரமாக்குகின்ற நோக்கில் வைத்திய கல்வியை  தனியார் மயப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இதன் மூலம் வறிய மாணவர்கள் வைத்தியர் ஆவதற்குரிய சூழ்நிலை குறைக்கப்படும். பணக்காரர்கள் தகுதி இல்லாதவிடத்தும், பணத்தின் மூலம் வைத்தியர் ஆவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். எனவே, இவ்வாறானதொரு திட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து, அகில இலங்கை வைத்தியபீட மாணவர்கள் செயற்பாட்டுக்குழு நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ரீதியில் நாமும் இங்கு இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை மேற்கொண்டதாகக் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X