2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஆசிரியை மீது கல்வீச்சு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 03 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனையில் ஆசிரியை ஒருவர் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதில், காயமடைந்த அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) அனுமதிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயத்தில் கற்பிக்கும் தன்னாமுனையைச் சேர்ந்த ஜெஸிந்தா செபஸ்தியன் (வயது 54) என்ற ஆசிரியை மீதே கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி ஆசிரியை வசிக்கும் வீட்டின் அயல் வீட்டுக்காரியே  தாக்குதல் மேற்கொண்டதாக அவர்  ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில்  ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X