2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பராமரிப்பு வேலைகளுக்காக மட்டக்களப்பில் மின்வெட்டு

Gavitha   / 2014 நவம்பர் 03 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
 
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு பிரதேசங்களில், செவ்வாய்க்கிழமை (04) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச மின் பொறியியலாளர் தெரிவித்தார்.
 
இதன்படி, செவ்வாய்க்கிழமை (04) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை விமானப்படைத்தளப் பகுதி, சேற்றுக்குடா, வீச்சுக்கல்முனை, திமிலதீவு  மற்றும்  புதூர் ஆகிய பகுதிகளில் மின்னெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
 
எதிர்வரும் புதன்கிழமை (05) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 வரை   மாவடிவேம்பு பகுதி முழுவதும் வெள்ளிக்கிழமை (07) காலை 9.00 மணி முதல் மாலை  7.00 மணி வரை கிண்ணையடி பகுதி முழுவதிலும் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 7.00  மணி வரை பஸ் தரிப்பு நிலையப் பகுதி, வாவிக்கரை-1, விமானப்படைத்தளப் பகுதி, சேற்றுக்குடா, வீச்சுக்கல்முனை, திமிலதீவு,  புதூர் மற்றும்  வவுணதீவு ஆகிய இடங்களிலும் மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X