2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்ததில் மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 10 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு - பதுளை வீதியில் மஹாஓயா சந்திக்கு   அண்மையிலுள்ள  பூலாவெளிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவர்,  மஹாஓயா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் சென்றுகொண்டிருந்த இம்முச்சக்கரவண்டியில்  ஏற்பட்ட கோளாறினால், முச்சக்கரவண்டி  வீதியை விட்டு விலகிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்தது.

முச்சக்கரவண்டியில் பயணித்த  மட்டக்களப்பு, களுவன்கேணியைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதி தெய்வநாயகம் டயஸ் (வயது 19), கே.மோகனதாஸ் (வயது 24), கே.ரஜிந்திரா (வயது 23)  ஆகியோரே படுகாயமடைந்ததாகவும்  பொலிஸார் கூறினர்.

இவர்களில் இருவருக்கு கைகள் முறிவடைந்துள்ளதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X