2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'மு.கா. வுடன் த.தே.கூ. சேர்ந்தால் கிழக்கு மாகாணத் தமிழர் பாதிக்கப்படுவர்'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 11 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்தால், கிழக்கு மாகாணத் தமிழர்கள் இன்னும் பாதிக்கப்படுவார்கள் என ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

ஏனெனில், கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒருபோதும் நம்பமாட்டார்கள். கிழக்கு மாகாணத்; தமிழர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பகடைக்காயாக பாவித்து அரசியல் தீர்வுக்கு வரமுடியாது எனவும் அவர் கூறினார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன்  மேற்கொண்டுவரும் உறவு தொடர்பில் இன்று திங்கட்கிழமை (10) அருண் தம்பிமுத்துவிடம் வினவியபோதே  இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

'எந்த அடிப்படையில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நம்பமுடியும் என்ற கேள்;வியை நான் எழுப்ப விரும்புகிறேன். 1987ஆம் ஆண்டு தமிழ் - முஸ்லிம் உறவுகளை குலைத்து முஸ்லிம்களை தனித்துவமாகக் கொண்டுசென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எவ்வாறு தமிழர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கப் போகின்றது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன அருகதையில் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட்டு ஆட்சியும் பற்றிப் பேசுகின்றார்கள். எங்களால் இதை ஒருபோதும் நம்பமுடியாது. தமிழர்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை நாங்கள் மறக்கக்கூடாது.

ஆட்சி நடக்க வேண்டுமாக இருந்தால் தமிழர், சிங்களவர், முஸ்லிம்  என்ற மூன்று சமூகமும் இணைந்து ஆட்சி புரியவேண்டுமே தவிர, முஸ்லிம்;களும் தமிழர்களும் ஒருபோதும் ஒன்றிணைய முடியாது.

முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றிணைவதை கிழக்கு மாகாணத் தமிழர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் பொருளாதார ரீதியிலும் அரசியல் பலத்திலும் தத்தளிக்கும் நிலையில் இருக்கும்போது,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டுச் சேருவோம் என்றால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களுக்காக இதுவரையில் எதனைத் தெரிவித்திருக்கின்றது. எனவே, இந்த இரு கட்சிகளின் கூட்டிணைவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

தமிழ்த் தேசியம் இவ்வாறான  பாதையில் செல்லுமானால், கிழக்கு மாகாணத்; தமிழர்கள் தமிழ்த் தேசியத்தை தூக்கிய எறியும் நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்படும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனக் கூறினார்.


  Comments - 0

  • man Tuesday, 11 November 2014 04:14 AM

    இனவாதத்திற்கு சிறந்த உதாரணம்-
    "முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றிணைவதை கிழக்கு மாகாணத் தமிழர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது."

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X