2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அனர்த்த ஒத்திகை முகாம்

Gavitha   / 2014 நவம்பர் 17 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின், மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 167சி கிராம உத்தியோகத்தர் பிரிவில்; திங்கட்கிழமை (17) அனர்த்த ஒத்திகை முகாம் இடம்பெற்றது.

இதன்போது, அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் பொதுமக்கள் எவ்வாறு அனர்த்தப் பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் மற்றும் அதன்போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பன தொடர்பான முன்னாயாத்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின், மட்டக்களப்பு மாவட்ட உதவி இணைப்பாளர் எம்.அல்தாப் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவு தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ், பிரிவு கிராம உத்தியோகஸ்தர் திருமதி. நிரோஸா கியாஸ் உட்பட இராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X