2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் விசேட திட்டம்

Freelancer   / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலத்தில் பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதற்கும்,  அமைதியான கொண்டாட்டத்திற்குத் தேவையான சூழரல உருவாக்குவதற்கும்  இராணுவத் தலைமையகத்தை மையமாகக் கொண்ட ஒரு செயல்பாட்டு அறையை நிறுவ பாதுகாப்புச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

பண்டிகைக் காலம் முடியும் வரை தொடர்ந்து செயல்படும் இந்த செயல்பாட்டு அறை, முப்படைகளுக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை உறுதி செய்யும் முக்கிய ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்படும்.

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பாதுகாப்பு சவால் அல்லது அவசரநிலைக்கும் உடனடி, ஒழுங்கான மற்றும் உகந்த பதிலை உறுதி செய்வதே இந்த கூட்டு ஒருங்கிணைப்பு பொறிமுறையின் முதன்மை நோக்கமாகும். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X