2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நெல் தானமளிப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நெல் தானமளிப்பு புன்னியதான தேசிய வைபவம் வியாழக்கிழமை(15) காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

உணவு பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நெல் தானமளிப்பு வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், காத்தான்குடி உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் எம்.ஐ.சுபைர், காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆ பள்ளிவாயலின் தலைவர் றஊப் மஜீத் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தலா ஒரு குடும்பத்துக்கு பத்து கிலோ வீதம் ஐம்பது குடும்பங்களுக்கு நெல் வழங்கி வைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X