2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி பழைய மாணவர் சங்கக்கூட்டமும் கௌரவிப்பு வைபவமும்

Gavitha   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கூட்டமும் கௌரவிப்பு வைபவமும் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளதாக, அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி (ஷர்க்கி)  செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் பயின்று மௌளவி பட்டம் பெற்று வெளியேறியவர்களுள் தேசிய, சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சகல பழைய மாணவர்களும் இக்கூட்டத்துக்கு வருகை தருமாறும்  பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் தங்களது விபரங்களை 0672279291 அல்லது 0779001872 எனும் அலைபேசி இலக்கத்துக்கு   தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X