2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கைவிடப்பட்ட காணியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விபுலானந்த வீதியில் உள்ள கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து  ஆண் ஒருவரின் சடலத்தை இன்று சனிக்கிழமை காலை (25) மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை மீன்பிடி வீதியைச் சேர்ந்த முகம்மது லெப்பை முகம்மது ஹனிபா வயது (58) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடற்றொழில் செய்பவர் என்றும் நேற்று வெள்ளிக்கிழமை (24) அதிகாலை வழக்கம்போல் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை என்றும் உயிரிழந்த நபரின் மனைவி தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தமது கணவனை சடலமாகவே  காண்கின்றேன் என சடலத்தினை பொலிஸாரிடம் அடையாளம் காட்டிய பின்னர்   அவர் தெரிவித்தார்.

நீண்ட நேரமாக சடலமொன்று காணப்படுவதாக  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலினையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியினை நாடியிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதவானும் மரண விசாரணை அதிகாரியுமான  எம்.பீ.எம் உசைன் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தினை  பிரேத பரிசோதனைக்காக  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல  அனுமதியளித்தார்.

தற்போது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X