Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Thipaan / 2015 மே 25 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்தில் தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் முடிச்சுக்கோரைப் புற்களின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
போரதீவுப் பற்று பிரதேசத்தில் மண்டூர், வெல்லாவெளி, மற்றும் பழுகாமம் ஆகிய மூன்று கமநல பரிவுகளை உள்ளடக்கியதாக இவ்வருடம் சுமார் 16,000; ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எது எவ்வாறாயினும் நெல்விதைத்து 7 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தக் கூடிய சிறந்த களை நாசிநிகளை விவசாயிகள் தெரிவு செய்து விசிறியிருந்தால் தற்போது கோரைப் புற்களின் தாக்கம் ஏற்பட்டிருக்காது என கமநல அபிவிருத்தி பெரும்பாக உத்தியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago